செவ்வாய், அக்டோபர் 04, 2016

கொஞ்சம் குரூரம் நிறைய வாழ்வு

இருப்பாய் என வந்தால்
போய்விட்டிருக்கிறாய்
சொல்லவேண்டி
எடுத்துவந்த சொற்கள்
வெம்பிக்கிடந்தன வெகுநாள் மனப்பையிலேயே
பேசிக்கொண்டிருப்பதாக
நினைத்துக் கொண்டு
குரல்கம்ம கசிந்துருகியபின்
காதில் விழுகிறது
இணைப்பு விடுபட்ட ஒலி
கம்மிய குரல் தீய்வதா
வேண்டாமாவெனத் திகைத்துப்போனது
எப்போதும் இப்படியே நிகழ்வதான
எதிரொலி வந்தால்
ஆறுதலாகும் தனித்துக்கிடக்கவில்லையென
கொஞ்சம் குரூரம்தான்
என்ன செய்ய


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...