ஞாயிறு, அக்டோபர் 16, 2016

மணிப்பயலின் வண்டி

ஈருளி ,பால்,மோர்,சர்க்கரை,
இடியாப்பக்குழல்
முறுக்கு உரல்
சமுக்காளம்,ஈச்சம்பாய், பாதாளக்கரண்டி
இரவல் வாங்கவென்றே 
யார் வீடு செல்வதென்று தெரியும்
உடைக்காதே,பிய்க்காதே,சிந்தாதே
அறிவுரைகளை கவனித்தது மாதிரியும்
உள்ளிருக்கும் குத்தலைக் 

கவனிக்காத மாதிரியும்
வரத் தெரிந்த மணிப்பயலுக்கு
டுர்..டுர் டுர்ரென ஒலியெழுப்பாமல் 

வண்டியோட்டதான் பழகவில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...