ஞாயிறு, அக்டோபர் 16, 2016

ஊர் வரைந்த மயில்

தன்மேல் எழுதப்படும் லிபி குறித்த 
விசனங்களோ கொந்தளிப்போ 
அடையாத தாளாகும் 
ஜென் நாளொன்றுக்கு காத்திருந்தேன்
இடையில்தான் எத்தனை யோசனைகள்
******************************************************************
ஆடு நகர்ந்துகொண்டேயிருக்கிறது
பச்சை படும்இடமெல்லாம்
கழுத்தில் கிட்டி மாட்டிவைக்காது 
என்ன வளர்ப்பு

********************************************************************
நீலம் ஒருவர்
பச்சை ஒருவர்
வட்டம் ஒருவர்
கோடு ஒருவர்
வரைந்து வரைந்து வந்திருக்கிறது 
நீங்கள் பார்க்கும் கோலமயில்
யார் அது என்பீர்கள்
யார்தானில்லை

*****************************************************************


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...