வெள்ளி, நவம்பர் 04, 2016

விடமுண்ட கண்டன்

ஆரஞ்சு நிறத்திலான கேசரித்துண்டுகள் 
விருந்தினரை,
வீட்டுக்குழந்தைகளை,
கட்டிகளின்றி கிளறிமுடித்தவளை
என எத்தனை பேரையோ 
பரவசப்படுத்திய காலத்தில்
புறப்பட்டோம்.
அதிகபட்ச உபசாரத்தின் அடையாளமான 

கேசரித்துண்டுகள் மஞ்சள் நிறம்
உற்ற காலை
நாம் கொஞ்சம்
அந்த நிறப்பொடி போலக் 

கொஞ்சமே கொஞ்சம் திடுக்கிட்டோம்.
மூடநெய்பெய்து முழங்கை வழிவார 

சர்க்கரைப்பொங்கல் தின்று சலிப்புற்ற சாமியெல்லாம்
கேசரித்துகள்களில் பசியாறத் தொடங்கியபோது
நமது உலகம் வண்ணமயமாகிவிட்டது
குட்டி குட்டி குப்பிகளில் நிறைந்த
வாசனாதி திரவியங்களும் பொடிகளுமாக 

பொங்கும் நிறங்களில் படைக்க விரும்புகிறோம்.
கேசர்பாதாம்,பிஸ்தா பச்சை,

வாடாமல்லி வண்ணங்களில் ததும்பும் 
பண்டபாத்திரங்களைப் பார்த்து 
பெருமூச்சு விடாதிரும் ஈசனே
இதிலாவது வண்ணங்களைத் தக்கவைக்கிறோம்.
எல்லாம் ரசாயனம்
எம்மைப்போல் குடல் பெறவில்லை
நீர்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...