ஞாயிறு, நவம்பர் 13, 2016

எறிந்த முதுகெலும்பு

விட்டுவிடு விலகிவிடு என்று 
யாருக்கும் உத்தரவிட 
இயலா அடிமைகள் நாங்கள் 
பிறந்தபோது முதுகெலும்பு இருந்திருக்கலாம் 
சதைப்பிண்டத்தையே ஆதாரமாக 
தகவமைத்துக் கொண்டுவிட்டோம்
எப்போதும் குனிய
குட்டிக்கரணம் போட
இலைபோர்த்திக் கதையெழுத
கற்பனையிலேயே புளகாங்கிதம்பெற
எல்லோருக்கும் தோதாக
சாம்பல்சத்து தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில்
எடுத்துக்கொள்ள ஏற்றபடி
எரித்து வைத்திருக்கிறோம்
மற்றபடி
பால் வேறுபாடில்லா குலவழக்கம் இது
என்பதையும் பதியுங்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...