ஞாயிறு, நவம்பர் 13, 2016

காலம் கேள்விகளால் தொடுக்கப்பட்டிருக்கிறது


கடலாகவோ மலையாகவோ
விரிவானாகவோ சொல்லிவிடமுடியவில்லை
காலத்தை
கோபமாகவோ மகிழ்ச்சியாகவோ
குமைவாகவோ அணுகமுடியவில்லை
காலத்தை
அறிந்ததாகவோ அறியாததாகவோ
நுனிப்புல்லாகவோ உணரமுடியவில்லை
காலத்தை
கொண்டதாகவோ இழந்ததாகவோ
ஏங்கியதாகவோ விடமுடியவில்லை
காலத்தை
உன்னுடையதாகவோ என்னுடையதாகவோ
நம்முடையதாகவோ பொதியமுடியவில்லை
காலத்தை
இறுகினால் இற்றுவிடுவிடுமோ
இளகினால் கொட்டிவிடுமோ
என்ற பாவனைக் கேள்விகளால்
தொடுக்கப்பட்டிருக்கிறது காலம்
மாலை வாடிவிடாது என்ற நம்பிக்கையுடன்...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...