திங்கள், நவம்பர் 07, 2016

இயக்கிய மலர்

மலர் ஒன்றோடு உரையாட நேர்ந்தது
முதல் கேள்வியே 
கொஞ்சம் அசைத்துவிட்டது போலும்
இப்படி ஒற்றைநிறமாக இருப்பது 
அலுப்பாயில்லையா ?
கொஞ்சம் வேறு வண்ணமும் கலந்திருந்தால் 
கவர்ச்சியாக இருக்குமே என்று வருந்தியதுண்டா?
தேவையில்லா தொந்தரவுக்கு 
ஆட்பட்டுவிட்டதைப்போல
காம்பின் நுனிவரை 
வளைத்து வளைத்து ஆடியபின்
என் நிறம் என் பெருமை
நீ கேட்டதுபோல் ஏங்க ஆரம்பித்திருந்தால்

யுகங்கள் கடந்து 
என் வர்க்கத்தை வளர்த்திருக்க முடியாது
இல்லாதது பற்றியோ இழந்தது பற்றியோ 

கலங்குவது 
இயக்கத்துக்கு எதிரானது என்றது
பழக்கதோஷத்தில் 

அது எங்கோ உறுப்பினர் எனக்கருதி 
நகர்ந்துவிட்டேன்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...