திங்கள், நவம்பர் 07, 2016

கடந்த எழுத்து

சென்ற காலங்களில் சிந்திய புன்னகை
காற்றிலேயே 
கரைந்து போயிருக்குமென்று நம்பியிருந்தேன்
அதே பருவத்தின் திரும்பலில் 
ஒரு முல்லைப்பூ இப்படி 
அகழ்ந்தெடுத்துக் கடைபரப்பி
அழவைக்குமென அறியவில்லை
பழைய காகிதங்களைக் கழிக்கும்போது 
திடுமென ஒரு கையெழுத்து பாதி அழிந்து
மீதி அழிக்க கண்ணீர் 

பொங்குமெனத் தோன்றவில்லை
கடந்தவையெல்லாம்
கடந்து விடுவதில்லை




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...