திங்கள், நவம்பர் 07, 2016

இடிந்த வாழ்வு

எல்லாம்தான் நடந்திருக்கும்
எல்லாரைப்போலவும் நடந்திருக்கும்
நாய்அலைச்சல் அலைந்து 
உண்ணாமல் உறங்காமல் உடுத்தாமல் 
இழுத்து இழுத்துப் பிடித்தது போதாமல்
கையெழுத்துக்களால் உயிர்ப்பித்த
கனவுகள் இருந்திருக்கும்
தேடித்தேடி தேர்வு செய்து
கொஞ்சம் அப்படி இப்படிதான் 

இருக்குமென்று பொய்யைய்யும்
சேர்த்தே படி ஏற்றிக்கொண்டு
நுழைந்து பார்த்திருப்பார்
சுளையாக எண்ணிவைத்து
சுமாராக எழுதிக்கொண்டிருக்கலாம்
பத்திரிகையா,கட்செவியா 

எப்படி அழைப்பது என்று
 திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கலாம்
தானாய் இடிந்தபோது பாதி
தள்ளி வெடித்தபோது மீதி
புகைந்தது வாழ்வு
#மவுலிவாக்கம்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...