வியாழன், ஆகஸ்ட் 31, 2017

மழை பெய்து கொண்டிருக்கிறது

மழை வந்துவிடும் போலத்தான்
இருந்தது
இடி இடிக்கத்துவங்கியது
'ரொம்ப பயமாருந்தா அர்ச்சுனா சொல்லு"
மின்னலின் கீற்று சன்னல்வழி நுழைந்து
அலமாரித்தூசியைச்
சரித்து விட்டது
கிளிப்புகள் தாங்காவிட்டால்
என்ற கேள்வியைத் தட்டிவிட்டுப்போனது காற்று
மொட்டை மாடித்துணிகளோடு
திரும்பி வந்த கணம்
மழை இவ்வளவு லௌகீகமாகிய
சோகம் இறங்கியது
வியர்வை பெருக கால்நீட்டி அமர்ந்தபோது
எல்லாம் முடிந்து போயிருந்தது



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...