வியாழன், ஆகஸ்ட் 31, 2017

பெயர்ப்பலகையின் பூச்சரம்

உப்புக்கடலை ருசிக்காமல் 
சிப்பி தேடிக் கொண்டே 
அலைகிறாய் 
மீனென்றும் சொல்கிறாய் 
ஏதாவது ஒன்றைத்தான் புரிந்து கொள்ள 
முடியும்


**************************************************
நீலமாய் இல்லாத அவுரி
நீலம் தருகிறது
வானென்று
சொல்வதையும்
கடலென்று சொல்வதையும்
நிறுத்தி
அவுரி என அழைக்கிறேன்.
இருப்பதல்ல பெறுவது நீலம்
என உணர்ந்தபிறகு


*******************************************
எப்படிச் சொல்வீர்கள்
தினந்தோறும் கடக்கும் பாதையின்
பெயர்ப்பலகையும்
அதில் தொங்கும் வாடிய சரமும்
யாரை நினைவூட்டுமென்று 
அவரவர்க்கு அவரவர் கிளை


****************************************************
இதழ் இதழாய்ப் பிய்த்து மெல்லுகிறவரிடம்
என்ன சொல்ல
என் மனதுக்கு சொல்லிக் கொள்கிறேன்
சாந்தி ...சாந்தி...சாந்தி


******************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...