செவ்வாய், நவம்பர் 21, 2017

தயாவனம்

சொல்வதற்கென்று ஏதுமில்லாமல் போகவில்லை
கேட்கும் இடத்தில் காகம் கரைந்து கொண்டிருக்கிறது
நிசப்தத்துக்கும் இரைச்சலுக்கும் 
வேறுபாடு மறைந்த காலம் 
அரூபக் கதவுகளைத் தட்டித்தட்டி 
தட்டித்தட்டி
உங்கள் கரங்கள் காய்த்துக்கிடக்கின்றன
என்றாலும் 

வெளுக்கும் என்றே உறங்கப் போகவும்

*********************************************************
இருத்தல் என்பதற்கு
இருத்தலே பொருளல்ல
தொலைந்து போனதாகவும் இருக்கலாம்
தொலைந்து போனதையெல்லாம்

 கண்டடைந்துவிடும் அதீத நம்பிக்கையில்
வெளிச்சத்தின் மேலேயே
தேடிக்கொண்டு திரிகிறேன்
வெளிச்சத்தின் உள்ளடுக்கில் 

உறங்கும் இருள் சிரிக்குந்தோறும்
திடுக்கிட்டு விட்டு
தொடர்கிறேன்
வெங்காயத்தோல் எத்தனை அடுக்கென்று சொல்ல


******************************************************************

தயாவனம்

வாகனவரிசையில் 
ஒளிர்பச்சை தரிசனத்துக்குள்
எத்தனை முறை....
மெய்யும் பொய்யும் புனைவும் 
தவிப்பும் கொண்டு 
யாரிடமோ நீட்டப்படும் கரங்களுக்கு
சாந்தி செய்ய வாய்க்காத
குறுகுறுப்பு துளிர்த்து துளிர்த்து 
விர்ரெனத் தாண்டுகையில் பேயாட்ட விருட்சமாகி
இரு நிமிடத்தில் இலையுதிர்ந்து
பட்டென பட்டு
அரை நிமிடத்தில் அப்புறமாகி
அடுத்த தயாவனம் 
கடைத்தெருவிலோ
சிவப்புத்தடையிலோ படரும்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...