செவ்வாய், டிசம்பர் 19, 2017

ஈர மணல்

சிப்பியும் சங்கும் அள்ளி வராதவர் 
காலோடும்
ஒட்டிவந்துவிடுகிறது
ஈரமணல்


*******************************************************
தொலைவதற்கான ஆயத்தம் தேடலாக மாற
தேடலுக்கான ஆயத்தம் 
தொலைதலாகவில்லை
இருக்கிறேன்
இருக்கலாம்

***********************************************************
அழாதே எனச்சொல்லவில்லை
காலையில் அழாதே என்றாய்
பக்கத்து கண்ணாடியில் தற்செயலாக நோக்கிய
அழுவதற்கான காரணங்கள் 
திகைத்து நின்றன

****************************************************************

கிள்ளக்கிள்ள துளிர்க்கும் 
பசலைக்கொடிக்குப் புரிகிற மாதிரி 
ஒருமுறையாவது நன்றிசொல்ல வேண்டும் 
முடிந்து போகுமுன்

*********************************************************************
நேற்று மாலை வெளிச்சத்தைவிட 
இந்தக்காலை வெளிச்சம்
பூரணம் காட்டுகிறது
இடையில் வந்த இருள் 
தள்ளிநின்று சிரிப்பதை 
நான் கேட்க விரும்பவில்லை
பார்க்கவுமில்லை
அட..
அதைத் தெரியவே தெரியாது என்றே வையுங்கள்

*****************************************************************************


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...