செவ்வாய், டிசம்பர் 19, 2017

சன்னத நட்சத்திரம்

இன்று ஒரு நட்சத்திரம் கேட்கிறேன் 
மௌனமாய் நகர்கிறது வானம் 
உன் முகம் போலவே எதையும் காட்டா இருள் 

சன்னதம் கொண்ட சந்தர்ப்பங்களை 
மீள்நினைவு கொள்ளவும் அறியாது 
மௌனமாகக் கல் பொறுக்கிக்கொண்டு 
அமர்ந்திருப்பாள் கனகா அத்தை
யாருமிலாத பொழுது ரகசியமாகக் கேட்பாள்
அப்பிடிஎல்லாமா கத்தினேன்
தலையசைத்தாலும்
அவள் கண்களில் தெரிவது திருப்தியா
அவநம்பிக்கையா
இன்றுவரை புரியவில்லை 


என்னால் முடிந்தது
அமாவாசை வானிடம் நட்சத்திரம் கேட்பது
பின்
மௌனத்தை எதிரொலிப்பது



1 கருத்து:

ஸ்ரீராம். சொன்னது…

ரசித்தேன்.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...